Home செய்திகள் வேலூரில் தொடரும் கஞ்சா போதையால் 2 நண்பர்களை கொன்று புதைத்த 3 ரவுடிகள் கைது.

வேலூரில் தொடரும் கஞ்சா போதையால் 2 நண்பர்களை கொன்று புதைத்த 3 ரவுடிகள் கைது.

by mohan

வேலூர் மாவட்டம் காட்பாடி வண்றந்தாங்கலை சேர்ந்த நேசக்குமார்(24) விஜய் (25) அதேப்போல் காட்பாடி விருதம்பட்டை சேர்ந்த ஆகாஷ் (20)சரத் (21) பாலா (21) ஆகிய 5 பேரும் போதை நண்பர்கள்.இவர்கள் கூட்டணி அமைத்து சிறுசிறு திருட்டுகளை செய்துவந்தனர்.ஆகாஷ், சரத், பாலா மீது காட்பாடி காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.இந்த நிலையில் காட்பாடி விருதம்பட்டு காவல்துறையினர் வழக்கு ஒன்றிற்காக விசாரணை செய்தபோது மற்ற நண்பர்கள் நேசக்குமார்,, விவிஜய் குறித்து கேட்டனர். இவர்களின் பதில் முரணாக இருந்த காரணத்தால் காவல்துறையினர் தங்கள் பாணியில் விசாரித்தபோது நாங்கள் 3 பேரும் சேர்ந்து கஞ்சா போதையில் அடித்து கொலை செய்து விருதம்பட்டு பாலாற்றங்கரையில் புதைத்துவிட்டதாக வாக்குமூலம் கொடுத்தனர்.புதைக்கப்பட்ட இடத்தை காட்பாடி டிஎஸ்பி பழனி தலைமையில் பார்வையிட்டனர். கொலை செய்து புதைக்கப்பட்ட 2 பேரின் உடலை தோண்டி எடுத்து விசாரணை செய்ய காவல்துறை முடிவு செய்து உள்ளது.கடந்த வாரம் வேலூர் தோட்டப்பாளையத்தில் கஞ்சா போதையில் பாலமுருகன் என்ற ரவுடியை நண்பர்களான ரவுடிகளே கொன்று புதைத்து குறிப்பிடத்தக்கது.வேலூரில் தொடர்ந்து ரவுடிகளின் தொல்லை அதிகரிப்பதுடன் ரவுடிகளை, ரவுடிகளே கொலை செய்துவருகின்றனர். இந்த கொலைகள் அனைத்தும் கஞ்சா போதையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

கே.எம். வாரியார் வேலூர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com