வேலூர் அடுத்த மொணவூர் அரசு ஐடிஐ விளையாட்டு மைதானத்தில் இன்று நடந்த விழாவில் இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் குடியிருப்புகளுக்கான முதற்கட்ட அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் வரவேற்றார். சிறுபான்மைதுறை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலன் அமைச்சர் செஞ்சிமஸ்தான் தலைமை தாங்கினர்.விழா பேரூரை ஆற்றிய தமிழக முதல்வர் முதற்கட்டமாக ரூ 142.16 கோடி மதிப்பிலான இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட அடிக்கல் நாட்டினார்.பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.கனிமவளம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கைத்தறி துறை அமைச்சர் காந்தி, வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், எம்எல்ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.பொது மற்றும் மறுவாழ்வுதுறை அரசு செயலாளர் ஜகந்நாதன் நன்றி கூறினார்.
10
You must be logged in to post a comment.