26
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகாவில் ஜமாபந்தி துவங்கியது.கே.வி.குப்பம் தாலுகாவில் வடுகந்தாங்கல், கே.வி.குப்பம் பிர்காவில் உள்ள கிராம கணக்கு வழக்குகளை ஆய்வு செய்யும் ஜமாபந்தி நேற்று துவங்கியது.கோவிட் தொற்று காரணமாக ஆன்லைன் மூலமாக பொதுமக்கள் மனு அளித்தனர்.தாசில்தார் ராஜேஷ்வரி ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் காமராஜ் கிராம கணக்குகளை ஆய்வு செய்தார்.சமூகநலதிட்ட தாசில்தார் விநாயகமூர்த்தி, துணை தாசில்தார் பரந்தாமன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் கலந்துகொண்டன
You must be logged in to post a comment.