10
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு சேர்ந்த இந்து சகோதரர் வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில் தொற்றால் பாதிக்கப்பட்டு காலமானார்.அந்த இந்து சகோதரரின் உறவினர்கள் கேட்டுகொண்டதின்பேரில் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவந்து பேர்ணாம்பட்டில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்.இதற்கான ஏற்பாட்டை தமுமுக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்ஆலியார் சுல்தான் மமக நகர செயலாளர் முகமது ரகீப், தமுமுக நகர துணைசெயலாளர் பைரோஸ் அகமது, அப்துல் சமத், சுகிர் அகமது, முகமது ரபீக், சனாவுல்லா, உஜேர் அகமது, சுஹேல் அகமது, வசீவல்லா ஆகியோர் கொண்ட மனிதநேய பண்பாலாளர்கள் செய்து இருந்தனர்.
You must be logged in to post a comment.