Home செய்திகள் வேலூருக்கு வருகைதரும் ஜனாதிபதி மற்றும் ஆளுநர் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

வேலூருக்கு வருகைதரும் ஜனாதிபதி மற்றும் ஆளுநர் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

by mohan

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீபுரம் பொற்கோவிலுக்கு நாளை 10-ம் தேதி இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிரோகித் வருகை தர உள்ளனர்.திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் 16-வது பட்டமளிப்பு விழாவில் காலை 10.30 மணியளவில் கலந்துகொள்கின்றனர்.பகல் 12.30 மணியளவில் ஸ்ரீபுரம் பொற்கோவில் உலக நன்மைக்காக நாராயணி பீடத்தில் ஸ்ரீசூக்த மகாயாகத்தில் இருவரும் கலந்துகொள்கின்றனர்.சென்னையிலிருந்து ஹெலிகேப்டர் மூலம் காலை வரும் இருவரும் 2 நிகழ்ச்சியையும் முடித்துவிட்டு மாலை அதே ஹெலிகேப்டரில் சென்னை செல்கின்றனர்.வேலூர் சேர்க்காடு, ஸ்ரீபுரம் பகுதியில் சுமார் 1500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com