33
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீபுரம் பொற்கோவிலுக்கு நாளை 10-ம் தேதி இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிரோகித் வருகை தர உள்ளனர்.திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் 16-வது பட்டமளிப்பு விழாவில் காலை 10.30 மணியளவில் கலந்துகொள்கின்றனர்.பகல் 12.30 மணியளவில் ஸ்ரீபுரம் பொற்கோவில் உலக நன்மைக்காக நாராயணி பீடத்தில் ஸ்ரீசூக்த மகாயாகத்தில் இருவரும் கலந்துகொள்கின்றனர்.சென்னையிலிருந்து ஹெலிகேப்டர் மூலம் காலை வரும் இருவரும் 2 நிகழ்ச்சியையும் முடித்துவிட்டு மாலை அதே ஹெலிகேப்டரில் சென்னை செல்கின்றனர்.வேலூர் சேர்க்காடு, ஸ்ரீபுரம் பகுதியில் சுமார் 1500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர்.
You must be logged in to post a comment.