11
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்ன கொம்பேஸ்வரம் பகுதியில் வசித்து வந்த விவசாயி கோவிந்தசாமி வீட்டில் தூங்கி கொண்டு இருந்த போது விடியற்காலை ஓசூரிலிருந்து வேலூர் நோக்கி சென்று கொண்பிருந்த காலி டிப்பர் லாரி டிரைவர் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டிற்குள் நுழைந்து விபத்துக்குள்ளானது இதில் டிரைவர் விருதம் பட்டை சேர்ந்த கோவிந்தராஜ் இறந்தார். உதவி டிரைவர் வெங்கடேசன் மற்றும் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 3 குழந்தைகள் 2 பெரியவர் என 6 பேர் காயமடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.