Home செய்திகள் குடியாத்தம் அருகே 50 லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகள் பிடிபட்டது காரில் வந்த இரண்டு பேர் தப்பி ஓட்டம்.

குடியாத்தம் அருகே 50 லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகள் பிடிபட்டது காரில் வந்த இரண்டு பேர் தப்பி ஓட்டம்.

by mohan

குடியாத்தம்அடுத்த சைனகுண்டா பகுதி ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ளது மேலும் சைன குண்டா சுற்றி வனப் பகுதியாக உள்ளது ஆந்திர மாநிலத்திலிருந்து செம்மரம் உள்ளிட்ட மரங்களை இரவு நேரங்களில் வாகனங்களில் மூலம் கடத்துவதாக வந்த தொடர் புகார்களின் பேரில் வேலூர் மண்டல வனப்பாதுகாவலர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ் குமார்,உதவி வனப்பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணன் தலைமையில் வனவர் முருகன் வன காப்பாலர் பூபதி உள்ளிட்ட வனத்துறையினர் குடியாத்தம் அடுத்த சைன குண்டா அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள கொண்டம்மா கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது ஆந்திராவில் இருந்து குடியாத்தம் நோக்கி சொகுசு கார் ஒன்று வந்தது அந்த சொகுசு காரை வனத்துறையினர் நிறுத்தி சோதனை போட்டபோது அதில் இருந்தவர்கள் இறங்கி தப்பி அடர்ந்த காட்டுக்குள் ஓடிவிட்டனர். அந்த வாகனத்தை வனத்துறையினர் தீவிர சோதனை செய்தனர் அப்போது சுமார் 4 அடி நீளம் கொண்ட 17 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது சுமார் 500 கிலோ மதிப்பிலான செம்மரக்கட்டைகள் இருப்பதாக கூறப்படுகிறது மதிப்பு 50 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது இதனை தொடர்ந்து வனத்துறையினர் காரையும் அதிலிருந்த செம்மரக்கட்டைகளை பாதுகாப்பாக சரக்கு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு காரை மீட்டு குடியாத்தம் வனத்துறை அலுவலகம் கொண்டு வந்தனர் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!