39
வேலூரில் ஒவ்வொரு ஆண்டும் சிதரா பெளர்ணமி முன்னிட்டு பிரம்மாண்ட தேர்பவனி நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கோவிட் காரணமாக விழா நடைபெறவில்லை.இந்த ஆண்டு நேற்று விடியற்காலை வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலிருந்து பூப்பல்லக்கில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் பூப்பல்லக்கு, வேலூர் அரிசி மண்டி சார்பில், வெல்லமண்டி சார்பில்,மோட்டார் வாகன பணிமனை உரிமையாளர்கள் சங்கம் சார்பில், வாணியர் வீதி, சலவன்பேட்டை ஆனைகுளத்தமன், லாங்கு பஜார்பூகமிஷன்வியபாரிகள் சங்கம் என 8 பூப்பல்லக்குகள் மலர் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.விடிய, விடிய முக்கிய வீதிகளில் உலா வந்தது. பக்தர்கள் வழிநெடுகிலும் ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர்.
You must be logged in to post a comment.