Home செய்திகள் பட்டா மாறுதலுக்கு ரூ4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது செய்யப்பட்டார்.

பட்டா மாறுதலுக்கு ரூ4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது செய்யப்பட்டார்.

by mohan

மதுரை மாவட்டம உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாயாண்;டி மகன் ரஞ்சித்குமார்.ஆட்மோ டிரைவர்.இவர் தன்னுடய தந்தை இறந்து விட்ட நிலையில் தன் பூர்விகச் சொத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக உசிலம்பட்டி தேனி ரோட்டிலுள்ள பத்திரபதிவுத் துறை அலுவலகத்தை அணுகியுள்ளார்.அங்கிருந்த நிலஅளவுத்துறை வட்டார அலுவலர் (சர்வேயர்) காஞ்சனா பட்டா மாறுதலுக்கு ரூ4 ஆயிரம் இலஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.இலஞ்சம் கொடுப்பதை விரும்பாத ரஞ்சித்குமார் லஞ்ச ஒழிப்புத்துறையை அணுகினார்.மதுரை இலஞ்ச ஒழிப்பு போலிசார் ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் அலுவலர் காஞ்சானாவிடம் அவரது அலுவலகத்தில் கொடுக்கும் போது அங்;கு மறைந்திருந்த டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான இலஞ்சஒழிப்புப் போலிசார் காஞ்சனாவை கையும்; களவுமாக பிடித்து கைது செய்தனர்.மேலும் இவருக்கு உடந்தையாக உடனிருந்த புரோக்கர் செந்தில்குமார் என்பவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com