தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்டுள்ளது. கொரோனா முழு ஊரடங்கில் பசியால் தவிக்கும் ஏழை,எளிய மக்களுக்கு அரசுடன் இணைந்து பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் நிவாரன பொருட்கள், உணவு பொட்டலங்கள் வழங்கி வருகின்றனர்
.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் கொரோனா முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து உணவு கிடைக்காமல் தவித்து வந்த ஏழை,எளிய மக்களுக்கு மாநில காங்கிரஸ் கட்சி செயலாளர் இளங்கோவன் உணவு பொட்டலங்களை வழங்கினார். இதில் நகர தலைவர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் தீபா பாண்டி, முன்னாள் மாவட்ட செயலாளர் விஜயகாந்தன் மற்றும் சீவெல்பர் அறக்கட்டளை நிறுவனர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உசிலைசிந்தனியா
You must be logged in to post a comment.