Home செய்திகள் உசிலம்பட்டி அருகே தீபாவளி பண்டிகையையொட்டி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கிய ஒன்றிய கவுன்சிலர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ராஜாக்காபட்டி கிராமத்தில் அமமுகவைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் அலெக்ஸ்பாண்டி மற்றும் அந்த பகுதி ஊராட்சி மன்ற தலைவர் சித்ராபால்ராஜ் ஆகியோர்கள் இணைந்து தங்களது சொந்த செலவில் ராஜாக்காபட்டி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக தீபாவளி பண்டிகை திருநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் புத்தாடைகள், இனிப்பு, காரங்களை வழங்கினார்கள். இதில் தூய்மை பணியாளர்கள் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்துகொண்டு தீபாவளி பொருட்களை பெற்றுச் சென்றனர்.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com