தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் அதனைதடுக்கும் விதமாக பொதுமக்கள் தாங்களாகவே தனிமைபடுத்தி கொள்ளவேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியான தேவர் சிலை அருகில் போலிசார் ரோந்துப்பணியில் ஈடுபடுவதால் மதுரை ரோடு பேரையூர் ரோடு ஆகிய பகுதிகளிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் அதன் அருகிலுள்ள குறுக்குத்தெருவான நாடார் புதுத் தெருவை பயன்படுத்தி வந்தனர்.
இவர்களை போலிசார் அவ்வப்போது கண்காணித்து எச்சரித்தாலும் போலிசார் இல்லாத நேரங்களில் இப்பாதையை பயன்படுத்தி வந்தனர்.போலிசாருக்கும் இவர்களை கட்டுப்படுத்துவது சவாலான காரியமாக இருந்தது.இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி இளைஞா்கள் சமூகஆா்வலா் சின்னராஜா மற்றும் வழக்கறிஞா் ராமச்சந்திரபிரதீப் தலைமையில் ஒன்று கூடி தார்ப்பாய்களைக் கொண்டு இருபுறமும் சாலையை மூடியுள்ளனர்.இதனால் பேரையூர் ரோட்டிலிருந்து மதுரை ரோட்டுக்கு அப்பாதையின் குறுக்கு வழியில் செல்ல முடியாது.மேலும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள சாலையை தாங்களாவே மூடி தங்கள் பகுதியை தனிப்படுத்திக் கொண்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.