Home செய்திகள் உசிலம்பட்டி -ஓய்வின்றி பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பரிசாக வழங்கிய ஒன்றிய கவுன்சிலர்

உசிலம்பட்டி -ஓய்வின்றி பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பரிசாக வழங்கிய ஒன்றிய கவுன்சிலர்

by mohan

கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் ஏப்-14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்க மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டிருந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள கிராம புறங்களில் உள்ள மக்களின் தூய்மையையும், அவர்களை பாதுகாப்பாக இருக்க அரசு அதிகாரிகளுடன் அந்ததந்த பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களை போற்றும் விதமாகவும், இவர்களின் பசியை போக்கும் நோக்கிலும் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புளியங்குளம், கொக்குளம் ஊராட்சி ஒன்றியத்திலன் 5 வது வார்டு கவுன்சிலர் முருகன் சுமார் 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அன்பளிப்பாக வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!