Home செய்திகள் உசிலம்பட்டி-எழுமலை-கருமாத்துாாில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

உசிலம்பட்டி-எழுமலை-கருமாத்துாாில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

by mohan

உசிலம்பட்டி

உசிலம்பட்டி தேனி மெயின் ரோட்டில் உள்ள முருகன் கோவிலில் மத்திய மாநில அரசை கண்டித்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் சாலை மறியல் சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் செல்லக்கண்ணு தலைமையில் விவசாயிகள்மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் விலைவாசி உயர்வை கட்டுப் படுத்து, பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க்காதேவிவசாயகள் கடன்களை தள்ளுபடி செய்பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தம் மட்டும் சாலை மறியல் நடைபெற்றது இதில் 111க்கு மேற்பட்டவர்களை போலீஸ் சார்கள் கைது செய்தனர்

எழுமலை

தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலைமறியல், ஆர்ப்பாட்டம், கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ள நிலையில் இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை காவல்நிலையம் முன்பு சிறு குறு தொழில்கள் மற்றும் சில்லரை வர்த்தகத்தை பாதுகாக்கவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்தும்; இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பினர். அதனைதொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதிகளில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கருமாத்தூர்

உசிலம்பட்டி மதுரை மெயின் ரோட்டில் உள்ள கருமாத்தூரில் மத்திய மாநில அரசை கண்டித்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் சாலை மறியல் சிபிஎம் ஒன்றிய செயலாளர் முருகன் சிஐடியூ மாவட்ட துணை தலைவர் பிச்சை ராஜன். விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் முத்து பாண்டி விவசாய தொழிலாளர்சங்கத்தினர் காசி ,மகாராஜன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் விலைவாசி உயர்வை கட்டுப் படுத்து, பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க்காதேவிவசாயகள் கடன்களை தள்ளுபடி செய்பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தம் மட்டும் சாலை மறியல் நடைபெற்றது.இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்து போலீசார் கைது செய்தனர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!