Home செய்திகள் உசிலம்பட்டியில் உள்ளாட்சி தேர்தலில் பலர் ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல்.

உசிலம்பட்டியில் உள்ளாட்சி தேர்தலில் பலர் ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல்.

by mohan

தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனைத்து பகுதிகளிலும் பலர் ஆர்வத்துடன் பல்வேறு பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஊராட்சி மன்றத் தலைவருக்கு டிசம்பர் 30ம் தேதி இரண்டாம் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலர் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சீமா ணுத்து பஞ்சாயத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிட உசிலம்பட்டியை சேர்ந்த இளைஞர் அமைப்பை சேர்ந்த அஜித் பாண்டி என்பவர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட பலர் ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!