Home செய்திகள் உசிலம்பட்டி அருகே ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வர்த்தக சங்கம் சார்பில் வழங்கிய நிவாரண பொருட்களை மதுரை மாவட்ட எஸ்பி சுஜித்குமார் பொதுமக்களுக்கு வழங்கினார்.

உசிலம்பட்டி அருகே ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வர்த்தக சங்கம் சார்பில் வழங்கிய நிவாரண பொருட்களை மதுரை மாவட்ட எஸ்பி சுஜித்குமார் பொதுமக்களுக்கு வழங்கினார்.

by mohan

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது., இந்த நிலையில் ஊரடங்கால் கிராமப்புற பகுதியில் பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.இந்த சூழலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பேருராட்சி பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என நூற்றுக்கணக்கான மக்களுக்கு எழுமலை வர்த்தக சங்கம் சார்பில் அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.இந்நிகழ்வை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் வந்து நிவாரண பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார். உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜன், எழுமலை பேருராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

உசிலைசிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com