மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி (45)என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் நாய் விழுந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் உசிலம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி தங்கம் தலைமையிலான தீணபை;பு வீரர்கள் நாய்தானே என அலட்சியம் காட்டாமல் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனத்துடன் விரைந்து சென்று கிணற்றில் விழுந்த நாயை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் தீயணைப்பு வீரார்கள் கிறணற்றில் விழுந்த நாயுடன் 1மணி நேரமாக போராடி பதிரமாக உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட நாய் யாருடையது உன்பது விசாரனை செய்ததில் அந்த பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய் என்பது தெரியவந்தது. இதனையடுத்து மீடகப்பட்ட நாயை கிணற்று உரிமையாளர் கருப்பசாமியிடமே தீயணைப்பு துறையினர் ஒப்படைத்தனர்.நாய் நன்றியுள்ளது என்ற பழமொழிக்கு ஏற்ப நாய் ஐந்து அறிவு ஜீவன் என்றாலும் கூட மனிதருக்கு இனையாக நாயும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் விதமே மீட்கப்பட்டதற்கு சாட்சியாகும்…
.உசிலைசிந்தனியா
You must be logged in to post a comment.