12
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறிஞ்சி மலைவாழ் மக்களுக்கு இன்று திமுக உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் ,மற்றும் உணவுகள் வழங்கப்பட்டது. இதில் உசிலம்பட்டி ஏழாவது வார்டு திமுக பிரதிநிதி வாசிமலை, மலைவாழ்மக்கள் 240 பேருக்கு பிரியாணி வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார், இதில் உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதந்தரம், நகர செயலாளர் தங்கமலைபாண்டி, ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்த விழாவில் திமுக பொருளாளர் தூக்க ஜெயபிரகாஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெகன், நெசவாளர் அமைப்பாளர் லிங்குசாமி, ஒன்றிய பொருளாளர் பழனி, தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி செயலாளர் முத்துசாமி, மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.