Home செய்திகள் ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் 4 மணி நேரம் தொடர் சோதனையில் கணக்கில் வராத பணம் 04,12,000/- சிக்கியதால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி – வேலூர் நெடுஞ்சாலையில் உள்ள சேவூர் பகுதியில் ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலராக சிவானந்தம்  மோட்டார் வாகன ஆய்வாளராக சிவகுமார் பணிபுரிந்து வருகின்றனர்.மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகமாக இருந்ததை கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த அலுவலகத்தின் கீழ் ஆரணி, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செய்யார், வெம்பாக்கக்கம் உள்ளிட்ட தாலுக்காக்கள் இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது.

இந்நிலையில் ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மீது வந்த பல்வேறு புகார்களின் அடிப்படையில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் டிஎஸ்பி தேவநாதன் தலைமையில் 3 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவினர் திடீரென வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் உள்ளே நுழைந்து கதவை உள்பக்கமாக தாழிட்டு 4 மணி நேரமாக திடீர் சோதனை மேற்கொண்டனர்.அலுவலகத்தின் உள்ளே இருந்து யாரும் வெளியே செல்லவும், வெளியே இருந்து யாரும் உள்ளே வருவதற்கும் அனுமதிக்காமல் சோதனை நடைபெற்றது.இந்த 4 மணி நேர திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் 04,12,000/- சிக்கியுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!