Home செய்திகள் தங்க தின விழா கொண்டாடப்பட்டது

தங்க தின விழா கொண்டாடப்பட்டது

by mohan

தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சங்கம் சார்பாக திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சங்கத்தின் சார்பில் இரண்டு கிலோ தங்கம் வழங்கிய முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தங்க தின விழாவாக கொண்டாடப்பட்டது.இன்று.1.10.19 காலை அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மன் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.அதனை தொடர்ந்து தங்கத் தேரை பெரும் திரளான பக்தர்கள் இழுத்தனர். சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. உச்ச கால அபிஷேக ஆராதனை விழாவும் நடைபெற்றது.முன்னதாக கடந்த 31 ஆம் தேதி கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களுக்கும் மற்றும் அடி அண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகளும் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியினை தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சங்கம் சார்பாக கௌரவத் தலைவர் தர்மலிங்க முதலியார், சங்கத் தலைவர் டாக்டர் தில்லை பாஸ்கர், செயலாளர் புருஷோத்தமன், பொருளாளர் கார்த்திகேயன் மற்றும் சங்கத்தின் செயற்குழு நிர்வாகிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு இன்று நடைபெற்ற விழாவில் சிறப்புறச் செய்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!