Home செய்திகள் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் கணினி பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு காணொளி காட்சி.

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் கணினி பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு காணொளி காட்சி.

by mohan

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியின் சுயநிதி தலைவர் பொன். பாலசுப்ரமணியன், செயலர் பொன். ரவிசந்திரன் கல்லூரியின் முதல்வர் அ.ரா.பொன். பெரியசாமி மற்றும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம். மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் ஆலோசனைப்படி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடித்த மாணவ மாணவிகளுக்கு கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “Fundamentals of computer science and computer applications” என்னும் நிகழ்ச்சி காணொளி காட்சியின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவ மாணவிகள் தாங்கள் வீட்டில் இருந்தபடியே 1.6.2020 முதல்5.6.2020 வரை ( காலை 11.00 -12.30) கற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதது. 🎤1.6.2020 மின்னணு தொடர்பு மற்றும் மேகக்கணினி சேமிப்பு. (Electoronic communication &cloud storage). 🎤2.6.2020 கூகுள் பயன்பாடு. (Google app). 🎤3.6.2020 காணொளிக்காட்சி செயல்பாடுகள். (webinar etiquetles) 🎤4.6.2020 அறிவியல் மற்றும் பயன்பாட்டில் வேலைவாய்ப்புகள் (opportunities in computer science & applications). 🎤5.6.2020 கணினி பயன்பாடுகள் (Applications of computer) 🌐இதில் கலந்துகொள்ள கட்டணம் ஏதும் கிடையாது. 🌐மேலும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் சான்றிதழ் வழங்கப்படும். 🌐இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் முன்பதிவு செய்து கொள்ளவும். 🌐மேலும் கீழ்க்கண்ட முகவரியில் பதிவு செய்து கொள்ளவும். hHps:/forms.gle/gSAi2ty9xpH864m6 இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!