Home செய்திகள் இராஜசிங்கமங்கலத்தில் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் மக்கள் பாதை சார்பாக மரக் கன்று நடும் விழா…

இராஜசிங்கமங்கலத்தில் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் மக்கள் பாதை சார்பாக மரக் கன்று நடும் விழா…

by ஆசிரியர்

இராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா இன்று 20-12-2018 இனிதே நடைபெற்றது. இந்த நிகழ்வை முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் மேல்மட்ட நிர்வாக குழு உறுப்பினர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் சசிக்குமார், செயலாளர் பகுர்தீன், பொருளாளர் கண்ணன், துணைத்தலைவர் காஜா ஆகியோர் தலைமை வகித்தனர்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர், ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்விற்காக மக்கள் பாதை மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் மரக்கன்றுகளை வழங்கினார். இன்றைய மரக்கன்று நடும் நிகழ்வை ஆசிரியர் சதக் அவர்கள் ஏற்பாடு செய்தார்.

மாநில அளவில் பொது அறிவு திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் பிரித்திவிராஜ் அவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னாள் மாணவர்கள், தற்போது பயிலும் மாணவர்கள், மக்கள் பாதை தோழர்கள் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com