12
கம்பம் பகுதியில் விபத்துகள் அதிகமாக நடக்கும் இடத்தை வாகன ஓட்டிகளுக்கு அறியும் வகையிலும் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கம்பம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தட்சிணாமூர்த்தி தலைமையில் SI திரு.நல்லுசாமி, HC திரு.கண்ணதாசன், Gr I திரு.தியாகமுத்து, Gr I திரு.ரியாஸ் முகமது ஆகியோர் கம்பம் புதுப்பட்டி சாலை பகுதியில் அதிகம் விபத்து ஏற்படும் இடங்களில் காவல் ஆய்வாளரே தனது உடன் பணி செய்யும் சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்களின் உதவியுடன் பெயிண்டால் படங்களை வரைந்தும், (DANGER) என்று எழுத்துக்களை எழுதியது அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.