இராமநாதபுரம், ஆக.16- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணாக்கருக்கு உயர் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட உதவிகள் தமுமுக, மமக சார்பில் வழங்கப்பட்டது. இராமநாதபுரம் சின்னக்கடை பைச் சேர்ந்த பெண்ணுக்கு சிறு தொழில் உதவி மண்டபம் சேர்ந்த அப்துலுக்கு உயர் கல்வி பயில ரூ.12 ஆயிரம், சென்னை சட்டக்கல்லூரி இறுதி ஆண்டு மாணவி நிலாபருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. மண்டபம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆலிம் இஸ்மாயிலுக்கு ரூ.25 ஆயிரம் மருத்துவ உதவி, ராமநாதபுரத்தில் விபத்தில் படுகாயம் அடைந்த அப்துல் காதருக்கு மருத்துவ உதவி ரூ.22 ஆயிரம், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஆலிம் முகைதீனுக்கு ரூ.30 ஆயிரம் இருதய நோய் சிகிச்சைக்கு வழங்கப்பட்டது. மாநில துணை பொதுச் செயலர்கள் எஸ்.சலிமுல்லா கான் ஆலோசனைப்படி மாவட்ட தலைவர் இபுராஹிம், தமுமுக மாவட்டச் செயலர் அப்துல் ரஹீம், மாவட்ட துணைச் செயலர் காதர் பிச்சை, தமுமுக மாவட்ட துணைச் செயலர்கள் சுலைமான், மில்லத் பிர்தவ்சி, சமூகநீதி மாணவர் இயக்கம் தென் மண்டல செயலர் அப்துல் வாஜித், சமூகநீதி மாணவர் இயக்கம் மாவட்ட செயலர் பிஸ்மில்லா கான், தகவல் நுட்ப அணி மாவட்ட செயலர் முஹமது ரஃபி, தமுமுக நகர் செயலர் முஹமது தமிம், மமக நகர் செயலர் தாஜ்தீன் ,நகர் பொருளாளர் மைதீன் கனி உள்பட பலர் பங்கேற்றனர்.
16
previous post
You must be logged in to post a comment.