செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது..
திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது. மகளிர் தின விழா முன்னிட்டு கேக் வெட்டியும் மெழுகுவர்த்தி ஏந்தி மகளிர் முன்னேற்றம் மற்றும் உரிமைகுறித்து உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியும் நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழுதலைவர் விஜயராணிகுமார் தலைமைதாங்கி சிறப்புரை பேசினார் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்;ச்சி அலுவலரும் அரசு ஊழியர் சங்க மாவட்ட மகளிர் குழு துணைத்தலைவருமான மிருனாளினி முன்னிலை வகித்தார் அரசு ஊழியரி சங்க வட்ட கிளை தலைவரும் துணை வட்டார வளர்ச்சி அலுவலருமான அண்ணாமலை கண்ணா கனகவள்ளி அரிராம் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்தி பேசினார் நிகழ்சசியில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மகளிர் குழுவினர் அரசு ஊழியர்கள் சங்க பெண் ஊழியர்கள் நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர் முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.