Home செய்திகள் செங்கம் அருகே குடும்ப பிரச்சினையில் மகள் பிறந்த நாளில் கணவன், மனைவி தீயில் கருகி பலி..

செங்கம் அருகே குடும்ப பிரச்சினையில் மகள் பிறந்த நாளில் கணவன், மனைவி தீயில் கருகி பலி..

by Askar

செங்கம் அருகே குடும்ப பிரச்சினையில் மகள் பிறந்த நாளில் கணவன், மனைவி தீயில் கருகி பலி..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள மேல் நாச்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது32)தச்சுதொழிலாளி. இவரது மனைவி தீபா(24) இவர்களுக்கு காமேஷ்(7 )பூஜா (3) என 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊரிலிருந்து மணிகண்டன், தீபா இருவரும் குழந்தைகளுடன் திருவண்ணாமலை அண்ணா நகரில் குடியேறினர். தச்சுதொழிலில் போதிய வருமானம் இல்லாததால் மணிகண்டன் வட்டிக்கு கடன் வாங்கி செலவு செய்து வந்தார். வட்டிக்கு கடன் வாங்குவதை மணிகண்டன் வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில் மகள் பூஜாவின் பிறந்தநாளான நேற்று முன்தினம் பெற்றோர் கொண்டாடியுள்ளனர்.

அப்போது மாலை வெளியில் சென்று திரும்பிய மணிகண்டன் மது குடித்து விட்டு வந்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக நள்ளிரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தீபா அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் தீ பற்றியது. இதில் உடல் முழுவதும் பலத்த தீக்காயமடைந்த இருவரும் கூச்சல் போட்டனர். அப்போது வலி தாங்க முடியாத தீபா ஓடிச் சென்று தண்ணீர் தொட்டியில் குதித்துள்ளார்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்க முயன்றனர். இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தீபாவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தீபாவின் தாய் தமிழ்செல்வி கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!