Home செய்திகள் பெரியகுளத்தில் பள்ளி மாணவர்களின் வீட்டிற்கேச் சென்று கொரானா நிவாரணப் பொருட்களை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் வழங்கினார்கள்!

பெரியகுளத்தில் பள்ளி மாணவர்களின் வீட்டிற்கேச் சென்று கொரானா நிவாரணப் பொருட்களை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் வழங்கினார்கள்!

by Askar

பெரியகுளத்தில் பள்ளி மாணவர்களின் வீட்டிற்கேச் சென்று கொரானா நிவாரணப் பொருட்களை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் வழங்கினார்கள்!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நெல்லையப்பர் நடுநிலைப் பள்ளி பல வருடங்களாக செயல்பட்டு கொண்டு வருகிறது. பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 275 மாணவர்கள் பயின்று வருகின்றனரர். இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் கிராமங்களில் இருந்து வருவதால் அங்கு போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் பள்ளி நிர்வாக சொந்த செலவின் மூலம் வாகனம் ஏற்பாடு செய்து அதன் மூலம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து பள்ளி முடிந்ததும் பின் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.தற்போது 144 தடை உத்தரவை அடுத்து பள்ளியில் பயிலும் 275 மாணவர்களும் மற்றும் பி டி ராஜன் நினைவு துவக்கப்பள்ளியில் பயின்று வரும் 40 மாணவர்களும் ஏழை எளிய மாணவர்கள் என்பதால் அவரவர் வீட்டிற்குச் சென்று இப்பள்ளியின் தாளாளர் முத்து மாணிக்கம் , செயலர் பாலசுப்ரமணியம் , தலைமை ஆசிரியர் லட்சுமணராஜா மற்றும் சக ஆசியரியர்கள் அனைவரும் அரிசி பருப்பு காய்கறி என்னை உள்ளிட்ட கொரானா நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.

A.சாதிக்பாட்சா. நிருபர் தேனி மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!