தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட 16 மற்றும் 18 வாரடுகளில் உள்ள முத்துராஜா தெருக்களில் கடந்த 1 மாத காலமாக சாலை குண்டுகுழியுமாக உள்ளது. இதனால் அருகில் உள்ள தெருக்களில் தேங்கும் சாக்கடை நீர் அனைத்தும் தெருக்களில் பாய்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் தெருக்களில் சாக்கடை நீர் செல்வதால் பொதுமக்களுக்கு டெங்கு பரவும் அபாயம் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்ததும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறுகின்றனர். மேலும் இந்த தெருவில் சாக்கடை நீர் செல்லும் பாலமும் சேதமடைந்து உள்ளது.உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் சேதமடைந்துள்ள பாலத்தையும், சாலையையும், தெருக்களில் பாயும் சாக்கடை நீரையும் சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11
You must be logged in to post a comment.