Home செய்திகள்உலக செய்திகள் தென்காசி மாவட்டத்தில் பொது மக்கள் குறைதீர் கூட்டம்; நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

தென்காசி மாவட்டத்தில் பொது மக்கள் குறைதீர் கூட்டம்; நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

by Abubakker Sithik

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் 1 கோடியே 32 லட்சம் லட்சத்து 92 ஆயிரத்து 470 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்..

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 11.03.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.93,011 வீதம் 20 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் ஒரு பயனாளிக்கு ரூ.8,500 வீதம் 8 பயனாளிகளுக்கு ரூ.68,000 மதிப்பிலான காதொலி கருவிகள் என மொத்தம் 28 பயனாளிகளுக்கு ரூ 18,68,220 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சமூக நலத்துறையின் மூலம் சத்தியவாணி அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு ரூ.1,56,000 மதிப்பிலான மோட்டார் இயந்திரம் பொருந்திய தையல் இயந்திரங்களும், 35 பயனாளிகளுக்கு ரூ 2,64,250 மதிப்பிலான நவீன உயர்ரக தையல் இயந்திரங்களும் மொத்தம் 65 பயனாளிகளுக்கு ரூ.4,20,250 மதிப்பிலான தையல் இயந்திரங்களையும்,

தென்காசி மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக்கல்வி) மூலம் விபத்தில் மரணம் அடைந்த தாய், தந்தை இறந்தவர்களின் குழந்தைகள் பயிலும் மாணவ, மாணவியருக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 25 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.75,000 வீதம் ரூ.18.75 இலட்சத்திற்கான நிரந்தர வைப்புத் தொகைக்கான ஆணையினையும், தாட்கோ மூலம் 46 பயனாளிகளுக்கு ரூ.91.29 இலட்சம் மானியத் தொகைக்கான ஆணை என மொத்தம் ரூ.1 கோடியே 32 இலட்சத்து 92 ஆயிரத்து 470 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.

மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 495 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்தையா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மு.முருகானந்தம், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரமேஷ், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் செல்வி.மதிவதனா, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெய பிரகாஷ், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா. ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!