இராமநாதபுரத்தில் கந்தசஷ்டி திருவிழா தொடர்ச்சி நிகழ்வாக முருகன் கோயில்களில் தெய்வானை திருக்கல்யாணம் இன்று (14.11.18) நடைபெற்றது.
வழிவிடு முருகன் திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு கோயில் முன்பாக நேற்று (13.11.18) சூரசம்ஹாரம், தெய்வானை திருக்கல்யாணம் இன்று (14.11.2018) நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் கோயில் அர்ச்சகர் சிவாச்சாரியார் தெய்வானைக்கு மாங்கல்யம் அணிவித்தார். இதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் ஆலய வளாகத்தில் அன்னதானம் நடந்தது. கோயில் நிர்வாக அறங்காவலர் சு.கணேசன் இனிப்பு வழங்கி அன்னதானத்தை துவக்கி வைத்தார். திருக்கல்யாண விழாவில் பங்கேற்க வந்திருந்த பெண்கள் பலருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் மாங்கல்யக்கயிறு, விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. திருமணத்தை முன்னிட்டு சஷ்டி முருகன் சந்தன அலங்காரத்திலும், மூலவர் வழிவிடு முருகன் விபூதி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா நவ.8 ஆம் தேதி காப்புக்கட்டுதல் உற்சவத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று (13.11.18) மாலை, ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அசூரனை வதம் செய்தற்கு பரிசாக இந்திரன் தனது மகள் தெய்வானையை திருமணம் செய்து கொள்ளும் நிகழ்ச்சி இன்று (14.11.18) நடந்தது. கோயில் பூஜகர்கள் தேவேந்திர சிவாச்சாரியார், ரமேஷ் சிவாச்சாரியார் ஆகியோர் ஆகம விதிகளின்படி திருமணம் நடத்தினா். தெய்வானை அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்த பின்னர் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற சுமங்கலிகள் மாங்கல்யக்கயிறு மாற்றிக் கொண்டனர். முன்னதாக மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடந்தது.
அதே போல் இராமநாதபுரம் சமஸ்தான திவான் வி.கே.பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் எம்.ராமு, ராமநாதபுரம் தமிழ்ச்சங்க தலைவி டாக்டர்.மதுரம் அரவிந்தராஜ், துணைத் தலைவர் குழ.விவேகானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாக்குழு தலைவர் எம்.காந்தி, செயலாளர் எஸ்.நாகராஜன், பொருளாளர் எஸ்.லோகநாதன் ஆகியோர் தலைமையில் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.