Home செய்திகள் மாற்றுத்திறனாளி இளம்பெண் கூட்டு பாலியல் வல்லுறவு-குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்திட TARATDAC சார்பில் தமிழக முதல்வருக்கு புகார் மனு..

மாற்றுத்திறனாளி இளம்பெண் கூட்டு பாலியல் வல்லுறவு-குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்திட TARATDAC சார்பில் தமிழக முதல்வருக்கு புகார் மனு..

by ஆசிரியர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாற்றுத்திறனாளி இளம்பெண் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணிடம் முறையான புகார் பெற்று உரிய வழக்கு பதிவு செய்யவும், குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர உரிய நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள உத்தரவிடவும் TARATDAC சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்.05/19 நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை தாலுக்கா, அப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி இளம்பெண் ஜூலை-7 இரவு, சமூகவிரோதிகள் சிலரால் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து, எமது மாற்றுத்திறனாளிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அடங்கிய குழு நேரில் விசாரித்ததில் 4 சமூக விரோதிகள் ஜூலை-7 இரவு முழுவதும் தன்னை வல்லுறவு செய்ததாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் தெரிவிக்கிறார்.

போதிய படிப்பறிவு இல்லாத மற்றும் புகார் அளிக்க விபரம் தெரியாத பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி தரப்பில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினரே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் வகையில் உரிய சம்பவங்களை குறிப்பிடாமல், புகார் எழுதிப்பெற்று, ஆய்வாளர் முதல் தகவல் அறிக்கையும் பதிந்துள்ளதாக தெரிய வருகிறது. ஆனால், அலெக்சாண்டர் (எ) சுந்தரம் என்ற குற்றவாளி மட்டும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக புகார் பெற்று, முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு 376 சேர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், காவல்துறை மற்ற குற்றவாளிகள் பெயர்களையும் எழுதி வாங்காதது என்பது அவர்களை தப்பிக்க வைக்கவே பயனளிக்கும் என எமது சங்கம் கருதுகிறது. எனவே, (1) நடந்துள்ள குற்றம் குறித்து மாதர் மற்றும் பெண் சமூக ஆர்வலர்கள், மூலம் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணிடம் உரிய புகாரினை பெற்று மாற்றுத்திறனாளிகள் உரமைகள் சட்டப்பிரிவு 92(ன) உள்ளிட்ட உரிய பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்யவும்,

(2) உரிய மருத்துவ நிபுணர்களைக் கொண்டு சம்பந்தப்பட்ட அனைவரையும் மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி தடையங்களை சேகரிக்கவும்

(3) குற்றத்தை உறுதிப்படுத்தி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விரைவில் கிடைத்திடவும்

(4) பாதிக்கப்பட்ட மாற்றுத்திறாளி பெண்ணுக்கு உரிய நிவாரணம் கிடைத்திடவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பா. ஜான்ஸிராணி – மாநில தலைவர்  எஸ். நம்புராஜன் – பொதுச்செயலாளர் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செய்தியாளர், அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!