Home செய்திகள் கோயில் ஊழியர் தற்கொலை: அறநிலையத்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி போராட்டம்..

கோயில் ஊழியர் தற்கொலை: அறநிலையத்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி போராட்டம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஆக.19 – 

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆய்வாளர் பிரபாகரன், இவர் கோயில் ஊழியர் நவீன் சந்துரு என்பவருக்கு பணிச்சுமை கொடுத்து அதிக மன அழுத்தம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த நவீன் சந்துரு தூக்கிட்டு தற்கொலை கொண்டார். மேலும் பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக பிரபாகரன் மீது புகார் எழுந்தது. இப்பிரச்னைக்கு காரணமாக பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோயில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் டிஎஸ்பி உமாதேவி, போலீசார், வட்டாட்சியர் ஜபார் உள்ளிட்டோர் சமரசம் பேசினர். பாதிக்கப்பட்டோர் தரப்பில் புகாரின் அடிப்படையில்  பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனால் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில், பிரபாகரனை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என கோயில் இணை ஆணையர் சிவராம் குமாரிடம், ராமேஸ்வரம் மக்கள் பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள் செந்தில்வேல், பிரபாகரன், சக்திவேல் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்து முறையிட்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com