மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிந்துபட்டியைச் சேர்ந்த மாயாண்டியின் மகன் சுரேஷ் (32). இவர் டிவி மெக்கானிக்காக அதே ஊரில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் ஈச்சம்பட்டியைச் சேர்ந்த வளர்மதி (25)க்கும் சுரேஷ்க்கும் கடந்த 2013ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவர் சுரேஷ் வேலை முடித்துவிட்டு தினமும் குடித்துவிட்டு மது போதையில் வீட்டுக்கு வருவதாக உறப்படுகிறது. இதை கண்டித்த மனைவி வளர்மதியிடம் தகறாறு செய்து வந்துள்ளார்.
இதனை வழக்கமாக கொண்ட கணவர் சுரேஷின் நிலைமையை பார்த்து மன உலைச்சலுக்கு ஆளான மனைவி வளர்மதி வீட்டில் தனியாக இருந்த போது இரண்டு குழந்தைகளையும் தவிக்கவிட்டு தனது சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார், தகவலறிந்த சிந்துபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வளர்மதின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்,
வளர்மதியின் பெற்றோர்கள் தங்களது மகள் சாவில் மர்மம் உள்ளதாக கூறி பிரேத பரிசோதணைக்கு பின் உசிலம்பட்டி அரசு மருத்துவமணையில் அவரது உடலை வாங்க மறுத்து உசிலம்பட்டி கோட்டாட்சியரிடம் கணவர் சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். அதனை தொடர்ந்து சிந்துபட்டி எஸ்ஐ குபேந்திரன், கணவர் சுரேஷை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர், அதற்கு பிறகு வளர்மதியின் பெற்றோர்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமணையில் அவரது உடலை வாங்கி சென்றனர். கணவர் சுரேஷை கைது செய்த சிந்துபட்டி போலீசார் வளர்மதியின் தற்காலை சம்பவம் குறித்து தீவிர விசரனை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment.