Home செய்திகள் இராமேஸ்வரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற திருச்சி பெண் போலீஸ்..

இராமேஸ்வரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற திருச்சி பெண் போலீஸ்..

by ஆசிரியர்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் செண்பகம், தேவ். இருவரும் திருச்சி திருவெறும்பூர் ஆயுதப்படை பிரிவு காவலர்களாக உள்ளனர். பணி நிமித்தமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ராமேஸ்வரம் வந்த போது செண்பகம், தேவ் இடையே காதல் மலர்ந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சிறுநீரகக் கோளாறால் தேவ், சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சேலத்தில் இருந்து செண்பகம் நேற்றிரவு ராமேஸ்வரம் வந்தார். விடுதியில் தங்கிய அவர் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் அறைக்கு திரும்பிய செண்பகம் காதலன் உடல் நிலையை எண்ணி மனமுடைந்து, எலி பேஸ்ட் விழுங்கி மயங்கி கிடந்தார். விடுதி ஊழியர்கள் தகவல் படி, செண்பகத்தை போலீசார் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அனுப்பினர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com