14
விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட ஏடிபி காம்பவுண்ட் இந்திராநகர் ஆகிய பகுதியில் கடந்த 21 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுவரை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 21 நாள்கள் ஆகியும் குடிநீர் விநியோகம் செய்யாத காரணத்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் குடிநீர் வழங்காத நகராட்சியை கண்டித்து ஏடிபி காம்பவுண்டில் அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் புல்லக்கோட்டை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெண்களுடன் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்ததின் பேரில் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.