Home செய்திகள் தொண்டி பாவோடி மைதானத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்.!

தொண்டி பாவோடி மைதானத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்.!

by mohan

1992ம் ஆண்டு டிசம்பர் 06 அன்று ஒட்டுமொத்த உலகமே விழித்திருந்த நேரத்தில், அயோத்தியில் முஸ்லிம்களின் இறையில்லமான பாபரி மஸ்ஜித் சங்கபரிவார சக்திகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இடிக்கப்பட்டது பள்ளிவாசல் மட்டும் அல்ல, தேசத்தின் இறையாண்மையும், ஜனநாயகமும், வழிபாட்டு உரிமையும், மதசார்பின்மையும், சிறுபான்மையினரின் நலன்களும், பாதுகாப்பும் சேர்ந்தே அப்போது தகர்க்கப்பட்டது. எனினும் இந்த பயங்கரவாதத்துக்கு எதிராக நிச்சயம் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்த வேளையில், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 27 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2019 நவம்பர் 9 அன்று, நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், கடந்த செப்.30 அன்று பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், இந்திய நீதித்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்தெறிந்தன. இதனால் உலக நாடுகளுக்கு முன்னாலும், சர்வதேச ஊடகங்களுக்கு முன்னாலும் இந்திய நீதித்துறை கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.இந்நிலையில், டிசம்பர் 6 பாபரி மஸ்தித் தினத்தன்று, பாபரி மஸ்ஜித் நில உரிமை விவகாரத்தில், வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991 ஐ அமல்படுத்தி, பாபரி மஸ்ஜித் இடத்தை மீண்டும் முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியும், பாபரி மஸ்ஜிதை சட்டவிரோதமாக இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரியும், மத்திய அரசு மற்றும் நீதித்துறையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக நாடு முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதிக்கு உட்பட்ட தொண்டி நகரில் , தொகுதி தலைவர் அபுல் கலாம் ஆசாத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,எஸ்டிபிஐ கட்சியின் நம்புதாளை கிளை தலைவர் சலாமத் குத்ஷி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.தமிழ் மாநில பேச்சாளர் ஜஹாங்கீர் அரூசி அவர்கள் துவக்க உரை ஆற்றினார்கள்.தொகுதி பொருளாளர் அப்துல்லாஹ் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.தொகுதியின் சமூக ஊடக அணித் தலைவர் முஹம்மது முஜாஹிதீன் மற்றும் தொகுதி இணைச் செயலாளர் அப்துல் மஜீத் ஆகியோர் கண்டன கோஷமிட்டனர்.தமிழ் மாநில பொதுச் செயலாளர். அப்துல் ஹமீது  சிறப்புரை ஆற்றினார்கள்.இறுதியாக தொண்டி கிளை தலைவர் அப்துல் ரஹ்மான்  நன்றியுரை ஆற்றினார்கள்.இந்த ஆர்பாட்டத்தில், இராமநாதபுரம் மாவட்ட தலைவர் M.I நூர் ஜியாவுதீன், மாவட்ட துணைத் தலைவர் N.முஹம்மது சுலைமான், மாவட்ட வர்த்தக அணித்தலைவர் A.சாதிக்குள் அமீன், திருவாடானை தொகுதி செயலாளர் S.முஹம்மது ஹனீப் , தொகுதி இணைச் செயலாளர்கள் S.ஹாஜி அலி, முஹம்மது ரிஸ்வான் ,மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவர் மு.அப்துல் சுக்கூர், இணைச் செயலாளர்கள் H.அன்சர் அலி ,M.சகுபர் அலி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹமீது இப்ராஹிம் ஆகியோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 700 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!