35
ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவிலான ஜூடோ போட்டி நவ.30 ல் நடந்தது. இதில் 14-வயதுக்குட்பட்டோர் 44 கிலோ எடைப் பிரிவில்பரமக்குடி பாரதியாா் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவிகள் மகாலட்சுமி, ரோஷிகா ஆகியோா் பங்கேற்றனா்.மகாலட்சுமி தங்கப் பதக்கம், ரோஷிகா வெண்கலப் பதக்கமம் வென்றனா். இதில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்ற மாணவி மகாலட்சுமியைபள்ளி தாளாளா் கே.ஏ.எம்.குணசேகரன், தலைமை ஆசிரியா் ஜெயசங்கா், உடற் கல்வி ஆசிரியா் ரகுராமன் ஆகியோா் பாராட்டினா்.
You must be logged in to post a comment.