வாடிப்பட்டி, செப்.5- சத்துணவுத்திட்ட பெயர்பலகையை அகற்றுவதால் எம்.ஜி.ஆரின் புகழை அழித்துவிடமுடியாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசினார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க.சார்பாக நாடாளுமன்றதேர்தல் பூத்கமிட்டி அமைக்க ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பேரூர்செயலாளர் டாக்டர் அசோக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,கள் கருப்பையா, மாணிக்கம், மாவட்டபொருளாளர் திருப்பதி, முன்னாள்பேரூராட்சிதுணைத்தலைவர் சோனை, ஒன்றியசெயலாளர் காளிதாஸ், யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா, மாவட்ட துணைச்செயலாளர் லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரவை துணை செயலாளர் சந்தனதுரை வரவேற்றார். இந்த கூட்டத்தில் மாவட்டசெயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது.- ஒரேநாடு ஒரேதேர்தல் என்று பலகட்ட ஆய்வுகளுக்குபின் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத்கோவித் தலைமையில் 8பேர்கொண்ட குழுஆய்வு செய்து அந்த ஆய்வறிக்கையை நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறார்கள் அங்கு இருஅவைகளிலும் விவாதித்தபின் சட்டத்தை நிறைவேற்றிவிட்டால்; அது தமிழ்நாடு மட்டுமல்ல நாடு முழுவதும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் செல்லும் என்பது முத்துவேல்க ருணாநிதி ஸ்டாலினுக்
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.