தமிழ் மொழியில் இலக்கணத்தை எளிதில் கற்றுக் கொள்ள கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா நூலை படியுங்கள் என அரசு அருங்காட்சியக விழாவில் பேராசிரியர் ஹரிஹரன் உரையாற்றினார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் நடைபெற்று வரும் தொடர் இலக்கிய கூட்டத்தின் ஆறாவது கூட்டம் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமையில் நடைபெற்றது. புன்னைச் செழியன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். கலை பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில் ‘கலைஞரின் புலப்பாட்டுத்திறன்!’ எனும் தலைப்பில் மேலநீலிதநல்லூர் பசும்பொன் தேவர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ஹரிஹரன் சிறப்பு சொற்பொழிவாற்றினார். அவர் பேசும்போது ‘கலைஞர் சங்க இலக்கிய நூல்களை பாமரரும் படித்து உணரும்படி எழுதியிருக்கிறார். அவரது தொல்காப்பிய பூங்கா நூல் தமிழ் இலக்கண நூற்பாக்களை எளியவர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் சுவாராசியத்துடன் எழுதப்பட்ட அருமையான நூல். நாமும் படிக்க வேண்டும் இளைஞர்களையும் படிக்க வைக்க வேண்டும். அதோடு தான் அவரது தாய் கவிதை நடை நூலும் மிகச் சிறப்பு வாய்ந்தது” என்றார். முன்னதாக புகைப்படக் கலைஞர் துரைராஜ், கற்பக விருட்சம் நற்பணி மன்ற தலைவர் ரம்யா வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர் சுப்பையா நன்றி கூறினார். சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேராசியை பிரியதர்ஷினி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முனைவர் கோ.கணபதி சுப்பிரமணியன், மருத்துவக் கல்லூரி மாணிக்கவாசகம் ஆகியோர் குலுக்கல் முறையில் தேர்வு பற்ற இருவருக்கு நூல்களை பரிசளித்தனர். நூற்றாண்டு விழா கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்ச்செம்மல் பாமணி, கவிஞர்கள் ஜெயபாலன், சக்தி வேலாயுதம், நல் நூலகர் முத்துகிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.