Home செய்திகள் சோழவந்தான் அருகே குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை..

சோழவந்தான் அருகே குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை..

by Askar

சோழவந்தான் அருகே குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை..

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி முதல் வடகாடுபட்டி வரை உள்ள சாலை மிக மோசமான நிலையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலையை சீரமைக்காமல் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுவதாக கூறுகின்றனர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் வனத்துறையினர் இந்த சாலையை ஆய்வு செய்து உடனேசாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிச் சென்ற நிலையில் தற்போது வரை சாலையை சீர் செய்யாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த அச்சத்துடனே பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் வாடிப்பட்டி யூனியன் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் நெடுஞ்சாலை துறையினர் வனத்துறையினருக்கு தொடர் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி சாலை யைஉடனடியாக சரி செய்ய சோழவந்தான்ட்டமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!