சோழவந்தானில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி..
சோழவந்தான் பஸ் நிலையம் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இதிலிருந்து, அரசு நகர பஸ் மட்டும் மார்க்கெட் ரோடு வழியாக பஸ் நிலையம் வந்து வட்ட பிள்ளையார் கோவில் வழியாக அந்தந்த ஊருக்கு சென்று வருகிறது. மார்க்கெட் ரோட்டில் மோட்டார் சைக்கிள் மற்றும் கடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால்,சிட்டி பஸ்கள் குறித்த நேரத்தில் சென்று வர முடியவில்லை. இது மட்டும் அல்லாது, போக்குவரத்து நெரிசல்காரணமாக பேருந்து சென்று வருவதில் காலதாமதம் ஏற்படுவதால், ஒரு சில வழித்தடம் ரத்து செய்யப்படுகிறது. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர். ஆகையால், காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர் துரைப்பாண்டி கூறியதாவது: சோழவந்தானில் தற்போது பஸ் நிலையம் திறக்கப்பட்டு அரசு நகர பேருந்துகள் இங்கு வந்து பயணிகளை ஏற்றி செல்கின்றன . அந்த பஸ்கள் மார்க்கெட் ரோடு வழியாக வரும் பொழுது பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதாலும், மற்றும் பிளாட்பார கடைகள் ஆக்கிரமிப்பு காரணமாகவும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் காவல்துறை மார்க்கெட்டு ரோட்டினை ஒருவழிப்பதியாக கடைப்பிடிப்பதற்கு நிரந்தரமான போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும். மோட்டர் சைக்கிள் பார்க்கிங் ஏற்படுத்த வேண்டும். மாரியம்மன் கோவிலுக்கு வரக்கூடிய வாகனங்கள் நிறுத்துவதற்கு தனி இடத்தினை ஏற்பாடு செய்ய வேண்டும். மாரியம்மன் சன்னதி தெருவை ஒருவழிப் பாதையாக ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அடுத்த வரும் நாட்கள் பொங்கல் பண்டிகை திருவிழா என்பதால், வாகனங்கள் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.