Home செய்திகள்உலக செய்திகள் பெண் சிசுக்களை கருவிலேயே அழித்து வந்த செவிலியர் கைது..

பெண் சிசுக்களை கருவிலேயே அழித்து வந்த செவிலியர் கைது..

by Abubakker Sithik

பெண் சிசுக்களை கருவிலேயே அழித்து வந்த செவிலியர் கைது..

கருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள். அரசு பணியை உதறி தள்ளிவிட்டு செவிலியர் ஒருவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக பெண் கரு கொலை மட்டுமே கருவிலேயே அழிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் பழையனூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கு ஏற்கனவே இருபெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் காயத்ரி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இதைத் தொடர்ந்து வயிற்றில் இருப்பது பெண் குழந்தை தானா என்பதை முன்கூட்டியே கண்டறிய மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியைச் சார்ந்த விருப்ப ஓய்வு பெற்ற அரசு செவிலியர் காந்திமதி என்பவரை அணுகி உள்ளார். காந்திமதி சோழவந்தான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காயத்ரி அழைத்துச் சென்று ஸ்கேன் செய்து பார்க்கும் பொழுது காயத்ரிக்கு மூன்றாவது பெண் குழந்தை என உறுதி செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து காயத்ரியிடம் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு காந்திமதி அவரு வீட்டிலேயே வைத்து காயத்ரிக்கு கருவில் இருக்கும் பெண் குழந்தையை கருகலைப்பு செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து காயத்ரிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கும் பொழுது காயத்ரி கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டதில் சட்ட விரோதமாக தான் கருக்கலைப்பு செய்ததாக ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை மாவட்ட சுகாதாரத் துறையினர் காந்திமதியின் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்த காந்திமதி விருப்ப ஓய்வு பெற்று கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக இதே மாதிரி கருவில் இருப்பது பெண் குழந்தை என தெரிந்தவுடன் அவற்றை கரு கலைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். விருப்ப ஓய்வு பெற்றதில் இருந்து ஒவ்வொரு வருடமும் சட்ட விரோதமாக பல கர்ப்பிணி பெண்களுக்கு பெண் சிசு கருக்கலைப்பு செய்திருக்கலாம் என சுகாதாரத் துறையினர் மதுரை மாவட்ட இணை இயக்குனர் செல்வராஜ் தலைமையான குழுவினர் சோதனையில் சந்தேகம் அடைந்துள்ளனர்.

மேலும் காந்திமதிக்கு உதவியதாக சோழவந்தான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் விஜயலஷ்மி என்பவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து காந்திமதியை கைது செய்த அலங்காநல்லூர் போலீசார் கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கருவில் இருக்கும் பெண் குழந்தையைக் கொல்வது பெண் கருக்கொலை எனவும், பிறந்த பின் கொல்வது சிசுக் கொலை எனவும் கூறப்படுகிறது. பெண் சிசுக் கொலைகள் அதிகமாக நடக்கும் மாவட்டமாக மதுரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!