15
இராமேஸ்வரம் முனியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் (டிஎன் 10 எம்எம் 1067), ராமேஸ்வரம் குணசேகரன் 45, களஞ்சியராஜா 36, கார்த்திகை சாமி 36, கீழக்கரை காமராஜ் 50 ஆகியோர் நேற்று காலை (11/02/19) கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துகொண்டிருந்தபோது காற்று, கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மீனவர்கள் 4 பேரும் நடுகடலில் விழுந்து தத்தளித்தனர். நள்ளிரவு 12:30 மணியளவில் அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த டி என் 10 எம்எம் 831 விசைப் படகு மீனவர்கள் மீட்டு இன்று காலை 12/02/2019, 6:30 மணிக்கு கரை சேர்ந்தனர். கோடியக்கரை பகுதியில் படகு மூழ்கியதாக கரை திரும்பிய மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர். இது குறித்து ராமேஸ்வரம் மீன்வளத் துறை அதிகாரிகள், மெரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.