திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முகாம் புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னி சுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, நிர்மலா மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திரா காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர் முகாமிற்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார் புதுப்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பின்னர் புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பார்வையிட்டு வட்டார மருத்துவமனை வட்டார மருத்துவ அலுவலர் மதன் குமாரிடம் மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து கேட்டறிந்தார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவமனை மருத்துவர்களின் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதி அளித்தார் மேலும், புதுப்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார். நிகழ்வின்போது புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் பொன்னை சுந்தரபாண்டியன் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறையினர் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
30
You must be logged in to post a comment.