திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் இயங்கும் 20 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 200 க்கும் பள்ளிகளில் பணிபுரிந்து வந்த நிலையியல் கடந்த ஓராண்டு காலமாக கொரோனா அவள் தோற்றாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள் முழுவதும் மூடப்பட்டது. ஒரு ஆண்டு காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால் தனியார் பள்ளிகளில் பணி புரிந்த ஆசிரியர்கள் வருமானம் இன்றி தவித்து நிலை ஏற்பட்டது. ஊரடங்கு முடிந்தபின்னர் படிப்படியாக தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என நம்பிக்கையோடு இருந்தனர்.ஆனால் கொரோனா இரண்டாம் அலை அதிதீவிரமாக உருவெடுத்ததால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளிகள் திறக்காமல் உள்ளது.தனியார் பள்ளிகளில் பணிபுரிந்த ஆசிரியர்கள் ஓராண்டு காலமாக வருமானம் ஏதுமின்றி தவித்து வருகின்றனர் மேலும் கிராமப்பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் வேலை இல்லாத காரணத்தால் கட்டிடப் பணி விவசாய கூலி பணி போன்ற பணிகளுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மிகக்குறைந்த சொற்ப கூறியே கிடைப்பதால் போதிய வருமானம் இன்றி குடும்பத்தோடு பசியும் பட்டினியுமாக வாழ்க்கை நடத்தி வருவதாக வேதனையோடு தெரிவித்தனர்.அண்டை மாநிலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் 2000 ரூபாய் மற்றும் 25 கிலோ அரிசி நிவாரணமாக வழங்கி வருகின்றனர் அதேபோன்று தமிழக அரசு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் 2000 ரூபாய் 25 கிலோ அரிசியும் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது பின்னர் 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள் செங்கம் வட்டாட்சியர் மனோகரனிடம் தங்கள் கோரிக்கையை மனுவாக அளித்து தங்கள் நிலைமையை அறிந்து தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுத்து உரிய நிவாரணம் வழங்க பரிந்துரை செய்ய வேண்டுமென கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
14
You must be logged in to post a comment.