Home செய்திகள் செங்கம் அருகே கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்

செங்கம் அருகே கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது . .கலசப்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் கௌதம்ராம் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் .இதில் சிறப்பு அழைப்பாளராக மக்களை ஊக்குவிக்கும் வகையில் கலசபாக்கம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயலட்சுமி கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.. பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி ஆர்வமுடன் தாமாக முன்வந்து 200 மேற்பட்ட மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனார் இதில் கீழ்பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை மற்றும் முக்கிய பிரமுகர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முகாம் சமூக இடைவெளி பின்பற்றி. நடைபெற்றது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com