Home செய்திகள் செங்கம் அருகே கிளினிக் திறப்பு விழா

செங்கம் அருகே கிளினிக் திறப்பு விழா

by mohan

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அம்மாபாளையம் கிராமத்தில் ராஜா கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது திறப்பு விழாவிற்கு செங்கம் சரக காவல்துறை கண்காணிப்பாளர் கே.சரவணகுமரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். மருத்துவர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார். திறப்பு விழாவையொட்டி , மருத்துவர் மணிகண்டன் ரத்த அழுத்தம், நீரிழிவு பரிசோதனை ஏழைகளுக்கு 50க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச பரிசோதனை மேற்கொண்டார்.விழாவில் மணிகண்டன் பெற்றோர் ராஜா, அஞ்சலை அம்மாபாளையம் கூட்டுறவு சங்க தலைவர் துரைசாமி முத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி, அம்மாபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராஜ், ஆசிரியர்கள் வேல்முருகன், அரசு மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் நாராயணன் அனைவருக்கும் நன்றி கூறினார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!