10
திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் ஆலோசனையின்படி பாரத சாரண இயக்க மாவட்டச் செயலர் பியூலா கரோலின் தலைமையில் நடைபெற்றது. சாரண ஆசிரியர் ஆயீஷா அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் வேத பிரகாசம் பள்ளி துணை ஆய்வாளர் குமார் ஆகியோர் கலந்துகொண்டு ராஜ்யபுரஸ்கார் தேர்வில் கலந்துகொள்ள இருக்கும் மாணவர்களுக்கு ஆலோசனைகளும் , படை பதிவு அவசியம் பற்றியும் விளக்கமாக கூறினார். சாரண ஆசிரியை அலோசியஸ் வேட்டவலம் பள்ளி சாரண ஆசிரியை ஜானகி ,இராயம் பேட்டை பள்ளி சாரண ஆசிரியை சுதா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ரமா செய்திருந்தார் சிறப்பாக நடைபெற்ற ராஜஸ்கார் தேர்வுக்கான ஆயத்த கூட்டத்தில் திருவண்ணாமலை இப்பகுதியைசார்ந்த75 பள்ளி சாரண சாரணிய ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். சாரணர் இயக்க பொறுப்பாளர் விக்னேஷ் நன்றி கூறினார்
You must be logged in to post a comment.