12
திண்டுக்கல் மெயின் சாலையில் முத்துலாபுரம் என்ற இடத்தில் நேற்று நள்ளிரவு பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது கம்பத்திலிருந்து சென்னை செல்லும் தனியார் ஆம்னி பேருந்தில் சுமார் 6 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயுடன் தேனியைச் சேர்ந்த அமரன் (வயசு 45) என்பவர் எந்த விதமான ஆவணம் இன்றி பணத்தை கொண்டு வந்தார். இவரை நிலக்கோட்டை வட்ட வழங்கல் தாசில்தார் சரவண வாசன், மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரவியம் மற்றும் குழுவினர்கள் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதாகக் கூறப்படுகிறது.
இதனால் உடனடியாக அப்பணத்தை கைப்பற்றி நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.
You must be logged in to post a comment.