30
சிஏஏ திருத்த சட்டத்திற்கு எதிராக.
சிஏஏ திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர் அதனின் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ராமநாதபுரம் கீழக்கரை வேதாளை பாம்பன் மண்டபம் மறைக்கப்பட்டினம் பெரிய பட்டினம் உட்பட அனைத்து ஊர்களிலும் இஸ்லாமியர்களின் ஜும்மா தொழுகையான சிறப்பு தொழுகை முடிந்த பின்பு பள்ளியின் வெளிப்பகுதியில் சிஏஏ திருத்த சட்டத்திற்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் நகர் நிர்வாகிகள் ஒன்றியம் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட திரளாக கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.